எவ்வளவு நாளைக்கு இதையே உருட்டுவீர்கள்?


ஆறு தர்மபூபதி

ஈவெரா வாரிசுகள் ஒவ்வொரு முறையும் பெரியார் இல்லையென்றால் நீ ஐ ஏ எஸ், நீ ஐ பி எஸ் ….. அந்த அதிகாரியாக இந்த அதிகாரியாக ….. அப்படி இப்படி ஆகியிருக்க முடியுமா என்று கேள்வி கேட்கின்றனர்

தமாஷாக இருக்கிறது இவர்கள் கேள்வி. இந்த ஈவெரா தமிழகத்தில் தான் இருந்தார்.இவர்கள் சொல்கிற மாதிரி புரட்சி செய்தாரென்று வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். இந்தியாவின் இதர மாநிலங்களிலும் இன்னும் சொல்லப்போனால் நம்மைவிட முன்னேறிய பின்தங்கிய பட்டியல் இனத்தவர் இருக்கின்றனரே! அங்கெல்லாம் ஈ வெ ரா புரட்சியினாலா இந்த முன்னேற்றம் கிடைத்தது?

எவ்வளவு நாளைக்கு இதையே உருட்டி கொண்டே இருப்பீர்கள்?


சரித்திரத்தை பின்னோக்கினால் ஒவ்வொரு ஜாதியினரும் தங்களுக்கு வேண்டப்பட்ட ஆட்சியாளர்கள் ஆண்டபோது அந்த சாதியினர் ஆதிக்க சாதிகளாக இருந்துள்ளனர். ஏன் இன்னமும் சொல்லப்போனால் இன்றைக்கு சொல்லப்படுகிற பல சூத்திர ஜாதியினர் மன்னர்களாக அரசாண்டு இருந்துள்ளனர். அப்படியென்றால் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களா? பல ஆண்டுகள் அடிமைப்பட்டு இருந்தனரா? அப்படி அடிமையாக இருந்திருந்தால் எப்படி மன்னர்களாக ஆண்டு இருக்க முடியும்? இப்பொழுது கூட சிலர் ஆட்சியில் சில ஜாதிகள் ஆதிக்க சாதியினராக இருக்கின்றனரே? உண்மையா இல்லையா?


ஆக ஜாதிகள் என்பது இடைசெருகல்கள் தான். இன்றைக்கு நூற்றுக்கணக்கான சாதிகள் இருக்கின்றன. இந்த சாதிகளை புராணங்களில் காட்ட முடியுமா? தொழில் அடிப்படையில் தான் ஜாதிகள் உருவாகின. அவர்கள் செய்யும் தொழிலை வைத்து அவர்கள் உயர்ந்தவர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் நாமே உருவாக்கிக் கொண்டதுதான் இது. ஏன் இப்போது கூட நாம் அப்படி பிரித்துப் பார்ப்பதில்லையா?


தொழிலாளர்கள் வேலை செய்யும் பெரிய பணிமனை ஒன்று இருக்கிறது.அங்கு தீண்டாமை இல்லையா? அங்கே ஜாதி பார்த்து வேலைகள் வழங்கப் படுவது இல்லை. அவர்கள் தகுதி படிப்பு ஏற்ப மேலாளர் வேலையும் துப்புரவு வேலையும் வழங்கப்படுகிறது. உயர்ந்த ஜாதியினர் கூட அந்த பணிமனையில் துப்புரவு போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். அவர்களை நாம் எப்படி அணுகுகிறோம். துப்புறவு பணியாளரை அழைத்து நமக்கு சரிசமமாக நடத்துகிறோமா? இல்லையே!


இன்னொன்று…..

ஹிந்து மதத்தில் நான்கு வர்ணம் கொடுக்கப்பட்டுள்ளது அதன்படி நீ சூத்ரன் நீ பார்ப்பான்…நீ வைஷ்யன்…நீ சத்ரியன் என்று பேசுகிறார்கள். அதற்கு விளக்கம் கொடுக்கும்போது சூத்திரன், காலிலிருந்து பிறந்தவன் என்கிறார்கள். கொஞ்சம்
யோசியுங்கள். நீ பகுத்தறிவுவாதி தானே! ஒருவன் காலிருந்து பிறக்க முடியுமா?

யாராக இருந்தாலும் பிறப்பு உறுப்பு வழியாகவே பிறக்க முடியும். பகுத்தறிவு பேசும் நீ காலில் பிறந்தான் என்றால் அதை நம்புபவன் பகுத்தறிவுவாதியா? காலில் பிறந்தவன் என்றால் சில குறிப்பிட்ட கீழ்மையான தொழில்களை செய்யக் கூடியவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டுமோ ஒழிய மாற்றி பொருள் கொள்ளக் கூடாது. அந்த கீழ்னிலை தொடர்ந்து அவர்கள் வழி வழியாக செய்யும்போது அந்த கூட்டம் ஒரு குறிப்பிட்ட ஜாதியாக மாறி விட்டது.அந்த கீழ்நிலை எப்படி வருகிறது?


ஒவ்வொருவரும் ஒரு பிறப்பில் தான் செய்யும் கர்மாக்களுக்கு ஏற்றவாறு மறு பிறப்பு எடுக்கிறார்கள். பாவம் செய்தவன் கீழ்மை தொழில்களை செய்யும் குடும்பத்திலோ அல்லது இன்றைக்கு அந்த குடும்ப ஜாதிகளிலோ பிறக்கிறான்.அப்படி பிறந்தால் மட்டுமே வழிவழியாக அந்த வேலையை செய்து வரும் குடும்பத்தில் பிறப்பதன் மூலம் தனது பாவத்திற்கு ஏற்ப அந்த வேலைகளை செய்து தண்டனை அனுபவிக்கின்றனர்.இதுதான் அந்த நான்கு வர்ணத்தின் சித்தாந்தம். இப்பொழுது காலம் மாறிவிட்ட சூழ்நிலையில் உயர் குடும்பத்தில் பிறப்பவன் கூட அந்த கீழ் நிலை வேலைகளை செய்கிறார்கள். ஆகவே வேண்டுமென்றே தவறாக பொருள் கற்பிக்கிறார்கள் இவர்கள்!


இறுதியாக ஹிந்து மதம் யாராலும் தோற்றூவிக்கப்படவில்லை.மேலும் அது மதமும் அல்ல.அது ஒரு தர்மம்! பல ஞானியர்களும் ரிஷிகளும் தோன்றி பல்வேறு கட்டங்களில் அந்த கால சூழ்நிலைகளுக்கேற்ப சில நியதிகளை வலியுறுத்தி மக்கள் அதை பின்பற்றி வந்திருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் முதலில். சிலர் சொன்ன கருத்துக்கு மாறாக அடுத்து வரும் குருமார்கள் வேறு நியதிகளைக் கூட சொல்லி உள்ளார்கள் அதை நாமும் ஏற்றுக் கொண்டு வாழ்க்கை நெறிகளை கடை பிடித்து வந்திருக்கிறோம் என்பது உண்மை.அப்படி ஒரு ஞானியர் சொன்னதுதான் இந்த மனுஸ்மிருதி. அதனால் இதுதான் ஹிந்து மதத்திற்கு பைபிள் குரான் போன்ற சட்டங்கள் அல்ல. அப்படி என்றைக்குமே இப்படி இந்த நியதியை கடைபிடித்தாகவேண்டுமென்று இருந்ததில்லை.அப்படி இருக்கும்போது இந்த திக கூட்டம் வேண்டுமென்றே இந்த வர்ணத்தை தூக்கி பிடித்து ஆடுவதும் ஹிந்து சமயத்தை இகழ்வதையும் பார்க்கும்போது இவர்கள் மாற்று மதத்தினருக்கு ஆள் பிடிக்கும் தரகர்களோ என்று தோன்றுகிறது!


Leave a comment